கிறுக்கெழுத்தாளன்

சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன்.


புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை.


இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ.


அகராதித் துணையின்றி கம்பர் முதல் நம்மாழ்வார் வரை வாசித்துப் புரிந்துகொள்ளவும் புரிந்ததை எடுத்துச் சொல்லவும் முடிகிறதே என்று எண்ணி சமாதானப்படுத்திக்கொண்டேன்.


பாண்டத்தைச் செய்பவன் குயவனென்றால், குயவனைச் செய்வது பாண்டம்தான்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2015 11:01
No comments have been added yet.